24 662d5037b0da1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் நடுவானில் திடீரென உடைந்து விழுந்த விமான கதவு

Share

அமெரிக்காவில் நடுவானில் திடீரென உடைந்து விழுந்த விமான கதவு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் (John F. Kennedy International Airport) இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் அவசர கதவுகள் தீடிரென கீழே விழுந்த சம்பவத்தினால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.

டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 520 என்ற எண் கொண்ட போயிங் 767 ரக குறித்த விமானமானது லாஸ் ஏஞ்சல்ஸ்(Los Angeles) நகர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.

இதன்போது, அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த வேளை, அதன் அவசரகால கதவு திடீரென விமானத்தில் இருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்துள்ளது.

இது தொடர்பில் விமானிக்கு தகவல் சென்ற நிலையில் உடனடியாக அந்த விமானம் மீண்டும் நியூயார்க்குக்கு திரும்பி அனுப்பப்ட்டுள்ளது. இந்த சம்பவம், விமானம் புறப்பட்டு சென்று 33 நிமிடங்கள் கழிந்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் விமான பயணி ஒருவர் கூறும்போது, விமானத்திலிருந்து ஒரு பெரிய சத்தம் கேட்டது. இதனால், விமானி அறையில் இருந்து அடுத்து, வெளியான அறிவிப்புகளை கூட சரியாக கேட்க முடியவில்லை. இந்த சம்பவம் எதிரொலியாக, பயணிகள் அனைவரும் உண்மையில் பயந்து போய் விட்டோம் என்று கூறியுள்ளார்.

மேலும், டெல்டா விமான நிறுவன பிரதிநிதி ஒருவர் சம்பவம் குறித்து கூறும்போது, எங்களுடைய நிறுவனம் மீட்பு முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவளிக்கும். விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விமானத்திலிருந்து அவசரகால கதவு கீழே விழுந்த சம்பவம் பற்றி அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...