24 662c2859bcfad
இந்தியாஉலகம்செய்திகள்

பிலிப்பைன்ஸுக்கு சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வழங்கிய இந்தியா

Share

இந்தியாவில் இருந்து பிலிப்பைன்ஸுக்கு பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் வழங்குவது தொடரும் என்று இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

375 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஏவுகணை வழங்கப்படும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஏவுகணை அமைப்பு சமீபத்தில் இந்தியாவில் இருந்து சிறப்பு சரக்கு விமானம் மூலம் பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையேயான ஏவுகணை ஒப்பந்தத்தின் முதல் படியாக இது செய்யப்பட்டது அதற்கான ஒப்பந்தம் 2022ல் கையெழுத்தாகியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் ஏவுகணை இறக்குமதியானது, தென் சீனக் கடலில், சர்வதேச கவனத்தை ஈர்த்து, சீனாவுடன் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள பிலிப்பைன்ஸ் தனது கடலோரப் பகுதிகளில் ஏவுகணை அமைப்பை நிறுவும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...