24 662af0d396706
இலங்கைசெய்திகள்

ஒகஸ்ட் மாதத்திற்கு முன் விநியோகிக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்

Share

ஒகஸ்ட் மாதத்திற்கு முன் விநியோகிக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்

தற்போதைக்கு தேங்கிக் கிடக்கும் விண்ணப்பங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுசனத் தொடர்பு அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெகுவிரைவில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரச நிறுவனங்களில் கூடுதல் வருமானம் ஈட்டும் நிறுவனமாகவும், துறைமுகம், சுங்கத் திணைக்களம் போன்ற முக்கிய பல நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டதுமான நிறுவனமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிடத்தக்க சேவையொன்றை ஆற்றி வருவதாகவும் அமைச்சர் பந்துல தொடர்ந்தும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...