24 662b2edd0010a
இலங்கைசெய்திகள்

இணைய வழியில் ஏலம்: இலங்கை சுங்கத்திற்கு அறிவுறுத்தல்

Share

இணைய வழியில் ஏலம்: இலங்கை சுங்கத்திற்கு அறிவுறுத்தல்

இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இணைய வழியின் மூலம் ஏலங்களை நடத்துமாறு இலங்கை சுங்கத்திற்கு (Sri Lanka Customs) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 25, 2024 முதல் இணைய வழி ஏலத்தை நடைமுறைப்படுத்துமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வர்த்தமானியில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) நேற்று (25.04.2024) நாடாளுமன்றத்தில் வைத்து இந்த விடயத்தை கூறியுள்ளார்.

பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக இணைய ஏலத்தை இதுவரை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்று கூறிய அவர், தற்போது இலங்கை சுங்கத்தின் அனைத்து ஏலங்களையும் இணையத்தில் நடத்துவதற்கு சுங்கத் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய முறையின் மூலம் அரசாங்கத்திற்கு முறையான வருமானத்தை பெற்றுக் கொடுப்பதுடன் தங்கம் உள்ளிட்ட பொருட்களை போட்டி விலையில் பெற்றுக் கொள்வதற்கான திறந்த உரிமையை மக்களுக்கு வழங்க முடியும் என இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...