24 66296b03de726
உலகம்செய்திகள்

காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி

Share

காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி

காசா பகுதியில் உள்ள கான் யூனிஸின் மருத்துவமனை வளாகத்தில் பாரிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கான் யூனிஸில் உள்ள அல் ஷிஃபா மற்றும் நாசர் மருத்துவமனை மைதானத்தில் அமைந்துள்ள இந்த புதைகுழியில் 283 சடலங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் சோதனையில் ஈடுபட்டு அங்கிருந்து வெளியேறிய பின்னரே இவ்வாறு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புதைக்கப்பட்ட சரியான திகதி மற்றும் இறப்புக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் வாக்கர் டர்க், இது மிகவும் ஆபத்தான சம்பவம் என்று கூறியுள்ளார்.

மேலும் சடலங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...