24 66296590cd4e4
உலகம்செய்திகள்

வாட்ஸ்அப் பயனர்களுக்கான புதிய அம்சம்

Share

வாட்ஸ்அப் பயனர்களுக்கான புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் (WhatsApp) இணைய இணைப்பு (Internet) இல்லாமல் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் கோப்புகளை பகிரும் வசதியை மெட்டா நிறுவனம் (Meta) தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் செயலியானது அதன் தளத்தை All in One சேவைகளுக்கான மையமாக மாற்றியமைக்கும் திட்டத்தில் மற்றுமொரு அம்சமாகவே இந்த புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) வசதியை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்அப் செயலி தற்போது இணையம் இல்லாமல் ஆவணங்களை மற்றவர்களுடன் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இணையவசதி இல்லாமல், புளூடூத் உதவியுடன் Share it மற்றும் Near By Share போன்ற செயலிகள் மூலம் புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களை அனுப்பமுடியும்.

அந்தவகையில் இப்போது வாட்ஸ்அப் செயலியும் இந்த சேவைகளை வழங்குகிறது.

அத்துடன் ஆவணங்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்பவும் இந்த அம்சம் பயனுள்ளதாக அமையும் என்றும் இந்த அம்சத்தை செயல்படுத்த வாட்ஸ்அப் பயனர்கள் WhatsApp System Files, Photo Gallery அணுகல் போன்ற அனுமதிகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த அம்சம் தற்போது beta பயனர்களால் சோதனை முறையில் சோதிக்கப்பட்டு வரும் நிலையில் இது விரைவில் அனைத்து WhatsApp பயனர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...