24 662737e214e8e
உலகம்செய்திகள்

சீனாவில் பாரிய வெள்ளம் : ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Share

சீனாவில் பாரிய வெள்ளம் : ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

சீனாவில் (China) பல நாட்களாக பெய்த கனமழையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக 110,000 மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா – குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் அதன் பெரும் நிலப்பரப்பு நீரில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக, இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கிய மக்கள் பாதுகாப்பிற்காக படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

குவாங்டாங்கின் பெரும்பகுதி டெல்டா (Delta) நதியின் ஒரு பகுதி என்பதால் இது கடல் மட்ட உயர்வு மற்றும் புயல் அலைகள் காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையிலேயே, ஏறத்தாழ 110,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் சுமார் 25,800 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அப்பகுதி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில பாடசாலைகளை மூடுவதற்கும் சீன அரசினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...