24 662737e214e8e
உலகம்செய்திகள்

சீனாவில் பாரிய வெள்ளம் : ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Share

சீனாவில் பாரிய வெள்ளம் : ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

சீனாவில் (China) பல நாட்களாக பெய்த கனமழையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக 110,000 மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா – குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் அதன் பெரும் நிலப்பரப்பு நீரில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக, இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கிய மக்கள் பாதுகாப்பிற்காக படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

குவாங்டாங்கின் பெரும்பகுதி டெல்டா (Delta) நதியின் ஒரு பகுதி என்பதால் இது கடல் மட்ட உயர்வு மற்றும் புயல் அலைகள் காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையிலேயே, ஏறத்தாழ 110,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் சுமார் 25,800 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அப்பகுதி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில பாடசாலைகளை மூடுவதற்கும் சீன அரசினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...