24 662606e176ab8
இலங்கைசெய்திகள்

வருவாய் இலக்கை எட்டத் தவறிய இலங்கை: ஆய்வில் தகவல்

Share

வருவாய் இலக்கை எட்டத் தவறிய இலங்கை: ஆய்வில் தகவல்

2024ஆம் ஆண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது வருவாய் மீதான வரவு செலவுத் திட்ட இலக்கை விட குறைவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

இந்த ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை (Budget – 2024) குறித்து வெரிடே (Verité) ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“1991ஆம் ஆண்டிலிருந்து வரவு செலவுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்குக்கான வருவாயை இலங்கை எட்டவில்லை.

அண்மையிலும், வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான நாடாளுமன்றக் குழுவானது வரி வருவாய் 2023இல் வரவு செலவுத் திட்ட இலக்கை விட 13 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்தது.

2024இல், அரசாங்கம் 4,164 பில்லியன் ரூபாய் வருவாயை எதிர்பார்க்கிறது. இது 2023ஆம் ஆண்டிற்கான அதன் திருத்தப்பட்ட கணிப்புகளிலிருந்து 42 சதவீத அதிகரிப்பு ஆகும்.

இருப்பினும், வரவு செலவு அறிக்கையின் நிலை 14 சதவீத பற்றாக்குறையுடன் 3,570 பில்லியன் ரூபாயாக மட்டுமே உள்ளது. உலகிலேயே அதிக வட்டி – செலவு – வருவாய் விகிதத்தை இலங்கை கொண்டுள்ளது.

மேலும், இந்த விகிதத்தை குறைப்பது, பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியமானதாகும்.

இதன்படி, 2024ஆம் ஆண்டின் பாதீடு, இந்த விகிதத்தை 64 சதவீதமாக குறைக்க எதிர்பார்க்கிறது.

எவ்வாறாயினும், இந்த விகிதம் கடந்த சில ஆண்டுகளில் இருந்ததைப் போலவே 70சதவீதத்தினை தாண்டும்.

எனவே, பொருளாதார வல்லுநர்கள் கடன் நிலைத்தன்மையின் முக்கியமான குறிகாட்டியாக கருதும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிய பொருளாதார மீட்சித் திட்டத்தில், இலங்கை வீழ்ச்சியடையும்” என சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...