j
செய்திகள்உலகம்

ஈகுவடாரில் சிறைக் கலவரம் : 24 கைதிகள் பலி!

Share

தென்அமெரிக்கா-ஈகுவடாரில் சிறைக் கலவரம் காரணமாக 24 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் துறைமுக நகரமான குயாகுவில் இருக்கும் சிறைச்சாலையிலேயே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

‘லாஸ் வெகோஸ்’ மற்றும் ‘லாஸ் கேனரஸ்’ என்று அழைக்கப்படும் இருதரப்பு கைதிகளுக்கிடையிலேயே குறித்த மோதல் உருவாகியிருந்தது.

கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதுடன் துப்பாக்கி சூடு, கையெறி வெடிகுண்டுகளையும் பயன்படுத்தி தாக்ககுதல் நடத்தியுள்ளனர்.

பொலிஸ் மற்றும் ராணுவ வீரர்களால் சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகே கலவரத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரமுடிந்தது.

இருந்த போதிலும் இந்த கலவரத்தில் 24 கைதிகள் கொல்லப்பட்டதோடு 48 கைதிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

அதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் ஈகுவடாரில் ஒரே நாளில் 3 சிறைகளில் நடந்த மிகப்பெரிய கலவரத்தில் 79 கைதிகள் கொன்று குவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...