j
செய்திகள்உலகம்

ஈகுவடாரில் சிறைக் கலவரம் : 24 கைதிகள் பலி!

Share

தென்அமெரிக்கா-ஈகுவடாரில் சிறைக் கலவரம் காரணமாக 24 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் துறைமுக நகரமான குயாகுவில் இருக்கும் சிறைச்சாலையிலேயே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

‘லாஸ் வெகோஸ்’ மற்றும் ‘லாஸ் கேனரஸ்’ என்று அழைக்கப்படும் இருதரப்பு கைதிகளுக்கிடையிலேயே குறித்த மோதல் உருவாகியிருந்தது.

கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதுடன் துப்பாக்கி சூடு, கையெறி வெடிகுண்டுகளையும் பயன்படுத்தி தாக்ககுதல் நடத்தியுள்ளனர்.

பொலிஸ் மற்றும் ராணுவ வீரர்களால் சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகே கலவரத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரமுடிந்தது.

இருந்த போதிலும் இந்த கலவரத்தில் 24 கைதிகள் கொல்லப்பட்டதோடு 48 கைதிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

அதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் ஈகுவடாரில் ஒரே நாளில் 3 சிறைகளில் நடந்த மிகப்பெரிய கலவரத்தில் 79 கைதிகள் கொன்று குவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...