24 66233a4cdea04
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடற்கரைத் திட்டம்! முந்திச்சென்றது இந்தியா

Share

இலங்கையின் கடற்கரைத் திட்டம்! முந்திச்சென்றது இந்தியா

இலங்கையிலுள்ள கடல்களுக்கு ‘நீலக் கொடி கடற்கரைகள்’ சான்றிதழை பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்த சான்றிதழை பெரும்பொருட்டு இலங்கையில் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இருபத்தெட்டு (28) கடற்கரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சான்றிதழினை பெற்றுக்கொள்வதற்கு 33 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுவதனால் அந்த நிபந்தனைகள் குறித்தும் கருத்தில் கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் இலங்கைக்குப் பின்னர் இந்த முயற்சியை ஆரம்பித்த இந்தியா, ஏற்கனவே எட்டு கடற்கரைகளுக்கான ‘நீலக்கொடி கடற்கரைகள்’ சான்றிதழைப் பெற்றுள்ளதாகவும், அதேசமயம், சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக தாம் ஆரம்பித்த திட்டத்தை இலங்கை இன்னும் ஆரம்பிக்கவில்லை என கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழினை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் உரிய தலைவர் வலியுறுத்தினார்.

நீலக் கொடி சான்றிதழானது கடற்கரைகள், மெரினாக்கள் மற்றும் நிலையான சுற்றுலாப் படகுகளுக்கான உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ விருதுகளில் ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...