saventhira
இலங்கைசெய்திகள்

தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் நடமாடத் தடையா?

Share

கொரோனாத் தடுப்பூசி பெறாத நபர்கள் பொது இடங்களில் நுழைய முடியாது என எந்தக் கட்டுப்பாடும் வெளியிடவில்லை.

இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளை முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நாடு மீளவும் திறக்கப்படவுள்ளது.

இதற்கென சுகாதார வழிகாட்டல் அடங்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் கொவிட் தடுப்பூசியை பெறாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய முடியாது என்று எந்தக் கட்டுப்பாடும் வெளியிடப்படவில்லை.

பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளை குறித்து வைத்து குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மக்களுக்கு தேவையான வழிமுறைகளை தயாரிக்குமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...