24 661e9eb71c6f5
இந்தியாசெய்திகள்

நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: நீதிமன்றம் உத்தரவு

Share

நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: நீதிமன்றம் உத்தரவு

இந்திய – பொலிவுட் திரைப்பட நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் இருவரை, ஏப்ரல் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14.04.2024) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து நேற்று (15.04.2024) 24 வயதான விக்கி குப்தா மற்றும் 21 வயதான சாகர் பால் என்பவர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், சந்தேகநபர்களை ஒன்பது நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன் இவர்கள் இருவரும் “குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவ இடத்தில் இருந்து இரண்டு பேர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...