24 661890c8312db
இலங்கைசெய்திகள்

கடை ஒன்றுக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

Share

கடை ஒன்றுக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

காலியில் (Galle) கடையொன்றில் வைத்து பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டமை தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

உரகஸ்மன்ஹந்திய (Uragasmanhandiya) பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்டிக்கர் கடையொன்றில் நேற்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊராகொட விதானகே யமுனா நிரோஷனி விதான என்ற வயது 43 பெண்ணே கடையில் உள்ள அறையொன்றில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்று காலை எல்பிட்டிய பதில் நீதவான் வருகை தந்து பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.

நேற்று அதிகாலை 5.45 மணியளவில் மனைவி கணனியில் வேலை செய்து கொண்டிருந்த போது இருவர் வந்து கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் எல்பிட்டியைச் சேர்ந்த லால் நிஷாந்த என்ற 25 வயதுடைய இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கொலையாளிகள் இருவரும் மனைவியிடம் பணம் கேட்டதாகவும், பணத்தை கொடுக்காததால், கூரிய ஆயுதத்தால் அவரது கழுத்தில் தாக்கியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் கணவரின் வாக்குமூலங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், கொலையாளிகள் எந்த திசையில் தப்பிச் சென்றுள்ளனர் என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எல்பிட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட நபரின் கணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா என்பது குறித்தும் பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...