24 661890c8312db
இலங்கைசெய்திகள்

கடை ஒன்றுக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

Share

கடை ஒன்றுக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

காலியில் (Galle) கடையொன்றில் வைத்து பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டமை தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

உரகஸ்மன்ஹந்திய (Uragasmanhandiya) பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்டிக்கர் கடையொன்றில் நேற்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊராகொட விதானகே யமுனா நிரோஷனி விதான என்ற வயது 43 பெண்ணே கடையில் உள்ள அறையொன்றில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்று காலை எல்பிட்டிய பதில் நீதவான் வருகை தந்து பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.

நேற்று அதிகாலை 5.45 மணியளவில் மனைவி கணனியில் வேலை செய்து கொண்டிருந்த போது இருவர் வந்து கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் எல்பிட்டியைச் சேர்ந்த லால் நிஷாந்த என்ற 25 வயதுடைய இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கொலையாளிகள் இருவரும் மனைவியிடம் பணம் கேட்டதாகவும், பணத்தை கொடுக்காததால், கூரிய ஆயுதத்தால் அவரது கழுத்தில் தாக்கியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் கணவரின் வாக்குமூலங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், கொலையாளிகள் எந்த திசையில் தப்பிச் சென்றுள்ளனர் என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எல்பிட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட நபரின் கணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா என்பது குறித்தும் பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...