இலங்கைசெய்திகள்

பிரபல வர்த்தகரின் சொகுசு வீட்டில் கொள்ளை: சிக்கிய சந்தேகநபர்கள்

Share
24 6618a49354d3b
Share

பிரபல வர்த்தகரின் சொகுசு வீட்டிள்ல் கொளை: சிக்கிய சந்தேகநபர்கள்

கந்தானை – வெலிகம்பிட்டிய தேவாலய வீதியிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் சொகுசு வீட்டினுள் நுழைந்து சுமார் 44 இலட்சம் ரூபா பெறுமதியான 27 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கண்டியின் மெனிகின்ன, பன்வில மற்றும் கம்பஹா பிரதேசங்களைச் சேர்ந்த 24, 27 மற்றும் 28 வயதுடைய மூன்று இளைஞர்கள் ஜாஎல மற்றும் கம்பஹா பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருடப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்து பெறப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட வாகனத்தை சந்தேகநபர்களுடன் சேர்த்து கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனத்திற்கு 14 இலட்சம் ரூபா கைப்பணமாக (குத்தகை முறையின் கீழ்) செலுத்தி 19 இலட்சத்திற்கு வாகனம் வாங்கியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வீட்டின் முன் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கமெரா காட்சிகளை அவதானித்த பின்னர், சந்தேகத்தின் பேரில் முதலில் அடையாளம் காணப்பட்ட சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் மேலதிக தகவல் கிடைத்துள்ளது

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கொள்ளையடித்து கிடைத்த பணத்தை செலவு செய்து அனுராதபுரம், எல்ல , நுவரெலியா ஆகிய இடங்களில் காரில் பயணம் செய்து ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...