24 66177aeda517e
இலங்கைசெய்திகள்

விவாதத்தின் நோக்கத்தை திசை திருப்பும் ஐக்கிய மக்கள் சக்தி

Share

விவாதத்தின் நோக்கத்தை திசை திருப்பும் ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் விவாதத்திலிருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalintha Jayatissa) குற்றம் சுமத்தியுள்ளார்.

அறிக்கையொன்றிலேயே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

குறித்த அறிக்கையில், “தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவே (Anura Kumara Dissanayake ) முதன்முதலாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) விவாதத்திற்கு அழைத்தார் என்பதை நான் நினைவூட்டுகின்றேன்.

2023ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது அனுரகுமார திசாநாயக்க, சஜித்துடன் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும், வெளிப்படுத்தப்படாத சில காரணங்களுக்காக குறித்த விவாத சவாலை சஜித் பிரேமதாச நிராகரித்ததார்.

இந்நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான மாற்று விவாதத்தை தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையுடன் முன்மொழிந்தனர்.

இந்தநிலையில், அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான சாத்தியமான வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் விவாதத்தின் முக்கியத்துவத்தை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
03 9
செய்திகள்உலகம்

ஈரான் புதிய தலைமை: அமெரிக்க ஒப்புதல் இன்றி நீடிக்க முடியாது என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வாரிசாக அவரது புதல்வர் மொஜ்தபா கமேனி...

02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...