24 66173c095b57f
இலங்கைசெய்திகள்

ரூபாவின் பெறுமதியில் ஏற்படும் அதிகரிப்பு : ரணில் வெளியிட்ட தகவல்

Share

ரூபாவின் பெறுமதியில் ஏற்படும் அதிகரிப்பு : ரணில் வெளியிட்ட தகவல்

ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி எதிர்காலத்தில் 280 ஆக குறையும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த சிரமங்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் அனைவரும் தற்போது சற்று தளர்வாக வாழ்க்கையை கழித்து வருகின்றோம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னர் அவ்வாறான நிலைமை ஒன்று காணப்படவில்லை.

அனைவரும் துன்பங்களை அனுபவித்தோம். பணிக்கு செல்ல முடியவில்லை. உணவு பெற்றுக் கொள்ள முடியவில்லை.

மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் போனது பாடசாலைகள் மூடப்பட்டது. அதிகமான துன்பங்களை நீங்களே அனுபவித்தீர்கள்.

குறைந்த வருமானம் கொண்ட மக்கள், பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்த மக்கள், விவசாயிகள் போன்றோர் கடும் நெருக்கடியின் போதும் அதனை பொறுத்துக் கொண்டனர். அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

நாட்டை ஏற்கும் போது கடுமையான சிக்கலுக்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என நான் நினைத்தேன்.

அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தோம். வற் வரி அதிகரித்தோம். அந்த வரியை நீங்களே சுமந்தீர்கள். அதனை சுமந்தமையினால் நாடு நிலையான நிலைக்குள்ளாகியுள்ளது.

தற்போது கடன் பெறுவதில்லை. டொலர் பெறுமதி குறைந்துள்ளது. மேலும் குறையும். 280 ரூபாயை எட்டும் என மத்திய வங்கி தெரிவித்துள்தென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...