24 6615dfedc00cc
இலங்கைசெய்திகள்

புத்தாண்டு காலத்தில் விலை குறைவை சந்தித்துள்ள அலங்கார கீரை வகைகள்

Share

புத்தாண்டு காலத்தில் விலை குறைவை சந்தித்துள்ள அலங்கார கீரை வகைகள்

சுற்றுலா விடுதிகளில் உணவு அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் சாலாது உள்ளிட்ட பல்வேறு வகையான கீரைகளின் விலை கடந்த ஜனவரி மாதத்தை விட இந்த நாட்களில் பத்து மடங்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

4,000 ரூபாவுக்கு விற்கப்பட்ட ப்ரோக்கோலி 300ரூபாவாகவும், 3,000ரூபாவுக்குவிற்ற சிவப்பு முட்டைக்கோஸ் 200ரூபாவாகவும் , 1,500ரூபாவுக்கு விற்ற கீரை 50 ரூபாவாகவும், 1,800ரூபாவுக்கு விற்ற ஐஸ்பர்க் 150 ரூபாவாகவும் விலை குறைவடைந்துள்ளது.

இது தவிர 350 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கொத்தமல்லி 80 ரூபாவாகவும், 1700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு கீரையின் விலை 250 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

இவ்வகை கீரைகளின் கேள்வி அதிகமாக இருந்தாலும் சுற்றுலா ஹோட்டல்களுக்கான தேவை குறைவாகவே காணப்படுவதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா நகரத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் இருந்து நாளொன்றுக்கு 2000 முதல் 3000 கிலோகிராம் வரையான சாலாது கீரைகள் தேவைப்படுவதாக நுவரெலியா(Nuwara Eliya) பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கலப்பட தேங்காய் எண்ணெய் விற்பனை: கல்முனை மற்றும் சாய்ந்தமருதில் 5 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு!

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்து விற்பனை செய்த...

Untitled 41
செய்திகள்அரசியல்இலங்கை

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் வழக்கு: பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில்,...

Untitled 40
செய்திகள்இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிரடிப் பேச்சு: பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின்...

Untitled 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: 4 பேருக்கு மரண தண்டனை!

நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று தனித்தனி கொலை வழக்குகளின் தீர்ப்பை இன்று...