images 7
இலங்கைசெய்திகள்

கட்சியையும் நாட்டையும் அழித்த மைத்திரிக்கு பைத்தியம்: சந்திரிக்கா கடும் தாக்கு

Share

கட்சியையும் நாட்டையும் அழித்த மைத்திரிக்கு பைத்தியம்: சந்திரிக்கா கடும் தாக்கு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை (Sri Lanka Freedom Party) நிரந்தரமாக மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை (Nimal Siripala de Silva) பதில் தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுத்ததாக அக்கட்சியின் புரவலர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் நேற்று முன்தினம் (08) கலந்து கொண்ட முன்னாள் அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) 2015ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்றதன் பின்னர் கட்சியையும் நாட்டையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் பொதுச் செயலாளர் மைத்திரிபால பெரும் எதிர்பார்ப்புடன் வேண்டாம் என்று கூறினார்.

மைத்திரிபால சிறிசேன கட்சி அரசியலமைப்பை முற்றாகக் குழப்பிவிட்டார். நான் நீக்கப்பட்டதாகவும், மீண்டும் நீக்கவில்லை என்றும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவர் உண்மையிலேயே பைத்தியம்தான் என முன்னாள்அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...