24 66148cd3bca48
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்கள்

Share

இலங்கையர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்கள்

நேபாளத்தில் (Nepal) இலங்கையர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பிலான மோசடி இடம்பெற்றுள்ளதாக நேபாள(Nepal) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலைக்காக கனடா, ருமேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து இலங்கை பிரஜைகள் நால்வரும் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

நேபாளத்தில் (Nepal) இலங்கையர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்கள் நால்வரை கடந்த 4ஆம் திகதி அந்நாட்டு பொலிஸார் கைது செய்திருந்தனர்.

நேபாள பொலிஸின் காத்மாண்டு நகர குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

42 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பாகிஸ்தானிய பிரஜைகள் இவ்வாறு கைது செய்ப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் பாகிஸ்தான் பிரஜைகளால் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை மிரட்டலுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...