2 1 scaled
சினிமாசெய்திகள்

அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Share

அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா. சுகுமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால், இப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 460 கோடிக்கும் மேல் இருக்குமாம். இவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ. 4 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறாராம்.

மேலும் ரூ. 80 கோடி மதிப்புள்ள தனி விமானத்தையும் வைத்துள்ளாராம். ஹைதராபாத்தில் இருக்கும் அல்லு அர்ஜுனின் பிரமாண்டமான வீட்டின் மதிப்பு ரூ. 100 கோடி என சொல்லப்படுகிறது.

நடிகர் அல்லு அர்ஜுன் ‘Falcon’ Vanity van எனும் வாகனத்தை வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 7 கோடி ஆகும். மேலும் Rolls-Royce Cullinan – ரூ. 6.5 கோடி, Hummer H2 – ரூ. 75 லட்சம், Jaguar XJL – ரூ. 99.5 லட்சம், Range Rover Vogue – ரூ. 1.78 கோடி, Volvo XC90 T8 Excellence – 1.30 கோடி ஆகிய கார்களை வைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...