24 661134deef7a7
இலங்கைசெய்திகள்

ஒரே வீட்டில் மீட்க்கப்பட்ட இரு சடலங்கள்

Share

ஒரே வீட்டில் மீட்க்கப்பட்ட இரு சடலங்கள்

உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல – பாஹலகம பகுதியில் வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரினதும், பெண் ஒருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்கலானது இன்று(06.04.2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மூன்று பிள்ளைகளின் தாயான டபிள்யூ.எம்.பிரியங்கனி (வயது 42) மற்றும் பி.எம்.அனுர பண்டார (வயது 39) ஆகிய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ள மூன்று பிள்ளைகளின் தாயான பிரியங்கனிக்கும், இவருடன் உயிரிழந்த திருமணமாகாத ஆண் அனுர பண்டார ஆகிய இருவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேநேரத்தில் இருவருக்கும் இடையில் இருந்து வந்த தகாத உறவு பெண்ணின் கணவருக்குத் தெரியவந்ததையடுத்து நேற்றுமுன்தினம் மாலை தாக்குதல் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து மேற்படி பெண் தனது வீட்டை விட்டு தகாத உறவைப் பேணி வந்த நபருடன் சென்றுள்ள நிலையில் இருவரும் வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வலப்பனை நீதிவான் வருகை தந்து சடலங்களைப் பார்வையிட்டு மரண விசாரணை நடத்தியுள்ளதோடு, சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? போன்ற கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...