24 660eccb925a3c
இலங்கைசெய்திகள்

மைத்திரிக்கு எதிராக திரும்பிய சந்திரிக்கா

Share

மைத்திரிக்கு எதிராக திரும்பிய சந்திரிக்கா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமர்ப்பித்த மனு இன்றைய தினம்(04) பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவி வகிப்பதற்கு மைத்திரிக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமர்ப்பித்த மனுவில், கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மைத்திரிபால சிறிசேன பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமையினால் கட்சிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, கட்சியின் தலைவராகவும் நாட்டின் அதிபராகவும் கடமையாற்றிய மைத்திரிபால சிறிசேன தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியதன் காரணமாகவே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 36
விளையாட்டுசெய்திகள்

தடையின்மைச் சான்றிதழ் கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நுவான் துஷார வழக்கு!

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை...

Untitled 35
செய்திகள்உலகம்

“ஹோர்முஸ் நீரிணையை நீங்களே கைப்பற்றுங்கள்”: நட்பு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி அழைப்பு!

ஈரானுடனான போர் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எரிபொருள்...

Untitled 34
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத்...

Untitled 33
செய்திகள்உலகம்

எண்ணெய் சந்தையில் கடும் அதிர்ச்சி: ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 106 டொலராக உயர்வு!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...