24 660ec6cf37eca
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கு அனுமதி! வெளியானது அறிவிப்பு

Share

வாகன இறக்குமதிக்கு அனுமதி! வெளியானது அறிவிப்பு

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு சில வாகனங்களை மட்டும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக மாத்திரம் அமைச்சரவை அனுமதிக்கேற்ப வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தயாரிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் (Sri Lanka) தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, வாகன இறக்குமதிக்கான தடையை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சில அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கைக்கு பயணம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தும் வாகனங்களை 6 வருடத்துக்கு மேல் பயன்படுத்த முடியாது.

சுற்றுலாத்துறையின் ஒரு சம்பிரதாயமாக குறித்த நடவடிக்கை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்கமைய, தற்போது சுற்றுலா பயணிகளால் பயன்படுத்தப்படும் வாகனங்கள் சிறந்த நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது சுற்றுலாத்துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அத்தியாவசிய தேவை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதாரத்துக்கு பாரிய பங்காற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டியது எமது பொறுப்பு“ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...