24 660cebaf03c75
இலங்கைசெய்திகள்

தென் கொரியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் திட்டம்..!

Share

தென் கொரியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் திட்டம்..!

தென் கொரிய அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் காற்றுச்சீரமைப்பிகளின் (air conditioners) ஆற்றல் திறன் சோதனைக்கான ஆய்வகம் இலங்கையில் விரைவில் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பச்சை வீட்டு வாயு உமிழ்வை குறைக்கும் நோக்கத்திலேயே தென் கொரியா இந்த ஆய்வகத்தை நிறுவ உதவுவதற்கு முன்வந்துள்ளது, அதன்படி இந்த திட்டத்திற்கு கொரியா எரிசக்தி ஏஜென்சி மூலம் நிதியளிக்கப்படுகிறது.

மேலும் இந்தத் திட்டத்தில், ஆய்வகத்தை நிறுவுதல் மற்றும் தேவையான மனிதவள பயிற்சி ஆகியவற்றை இந்த ஆண்டிற்குள் (2024) நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தென்கொரிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கையொப்பமிடவுள்ள குறிப்பாணை மற்றும் பரிந்துரைகளும் வெளியிடப்படவுள்ளது.

இதற்காக வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பான உடன்படிக்கை ஒன்றும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, இந்த உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரிந்துரைகளில் கைச்சாத்திடுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இந்த வாரம் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...