24 660a559a62410
இலங்கைசெய்திகள்

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை திருத்தம்: நுகர்வோருக்கு அறிவுறுத்தல்

Share

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை திருத்தம்: நுகர்வோருக்கு அறிவுறுத்தல்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (Ceylon Petroleum Corporation) எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக சினோபெக் (SINOPEC) நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

அத்துடன் நாடு முழுவதும் உள்ள சினோபெக் எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது நுகர்வோர் இந்த விலை மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சினோபெக் அறிவித்துள்ள விலை திருத்தத்தின் படி ஒக்டேன் 95 பெட்ரோலுக்கு லீட்டருக்கு 7 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 440 ரூபாவாக உள்ளது.

அதேபோல், சூப்பர் டீசல் லீட்டருக்கு 72 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 386 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மண்ணெண்ணெய் விலையும் லீட்டருக்கு 12 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 245 ரூபாவாக உள்ளது.

எவ்வாறாயினும், ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் லீட்டருக்கு முறையே 368 ரூபா மற்றும் 360 ரூபா என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நிர்ணயித்துள்ள விலைகளுக்கு ஏற்ப, மாற்றமில்லாமல் இருக்கும் என்று சினோபெக் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட சினோபெக் நிறுவனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்னதாக அறிவித்திருந்தார்.

கடந்த 15.08.2023 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியிருந்தார்.

அத்துடன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சினோபெக் நிறுவனம் 2023 செப்டெம்பர் மாதம் முதல் நிறுவனத்தின் வர்த்தக நாமத்தில் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதற்குள் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடனும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் மாத்திரமே இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விட சினோபெக்கில் 3 ரூபா குறைவாக காணப்படுவதுடன், ஏனைய எரிபொருட்களின் விலைகள் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தி்ற்கு சமமான விலையாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...