sajith resign
இலங்கைசெய்திகள்

அப்பாவிப்பொதுமக்களின் நிலங்கள் சூறையாடப்படுகின்றன – எதிர்க்கட்சி தலைவர்

Share

நாட்டினுடைய வளங்களை துச்சமாக கருதி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கம் , மறுபுறத்தில் அப்பாவிப்பொதுமக்களின் நிலங்கள் சூறையாடுவதனை ஊக்குவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

பாணமவில் உள்ள ராகம்வேல கிராமத்தில் நடைபெற்றுவருவதாக கூறப்படும் நில அபகரிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்றிருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் .

இவையனைத்தும் நாட்டினுடைய பொதுச்சொத்துக்கள் என குறிப்பிட்ட அவர் இவை ஒரு தனி நபருக்கோ அல்லது குழுவுக்கோ சொந்தமானதல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் அதிகாரத்தை வைத்தோ அல்லது பணபலத்தின் மூலமாகவோ இந்தக் காணிகளை எந்தத்தரப்பினை சேர்ந்தவர்களும் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறான செயற்பாடுகளினால் அராசாங்கம் நாட்டை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியிருக்கின்றது என குற்றம் சாட்டிய அவர் , உரிய சட்டங்களுக்கு மாறாக நடைபெறுகின்ற நிலஅபகரிப்பை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்துள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...