மட்டக்களப்பு பகுதியில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக சிறுமி ஒருவர் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று (27) இரவு மட்டக்களப்பு அரசடி,பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து சிறுமி ஒருவர் தூக்கில் தொங்குவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர் .
குறித்த சிறுமி மட்டக்களப்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08கல்வி பயிலும் 13வயது சிறுமி ஆவார்.
குறித்த சிறுமியின் பெற்றோர் நேற்று மாலை வெளியில் சென்ற நிலையில் சிறுமியும் அவரது சகோதரியும் வீட்டிலிருந்துள்ளனர். சிறுமி சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது தமக்கை குளியலறையிலிருந்ததாகவும், வெளியில் வந்து பார்த்தபோது சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை தூக்கில் தொங்கிய நிலையிலிருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தூக்கில் தொங்கிய நிலையிலே சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மரணம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment