1 14 scaled
சினிமாசெய்திகள்

விஜய் டிவி செல்லப்பிள்ளை டிடிக்கு இத்தனை கோடி சொத்துக்களா? ஆனால் அதைவிட இதுதான் பெரிசு..!

Share

விஜய் டிவி செல்லப்பிள்ளை டிடிக்கு இத்தனை கோடி சொத்துக்களா? ஆனால் அதைவிட இதுதான் பெரிசு..!

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை யார் என்று கேள்வி கேட்டால் உடனே அனைவரது பதிலும் டிடி என்பதாக இருக்கும் என்று தெரிந்த நிலையில் தற்போது அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் போது விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமான டிடி, ‘உங்கள் தீர்ப்பு’ என்ற நிகழ்ச்சியை முதன் முதலில் தொகுத்து வழங்கினார். இதையடுத்து பாலசந்தர் இயக்கிய ’றெக்கை கட்டிய மனசு’ என்ற சீரியலில் நடித்த நிலையில் அதில் கிடைத்த பாப்புலாரிட்டி மூலம் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் டிடி, சில நிகழ்ச்சிகளை சொந்தமாக விஜய் டிவிக்காக தயாரித்திருந்தார்.

அவரது திருமண வாழ்க்கை மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தாலும் அவர் தனது தொகுப்பாளினி தொழிலில் மட்டும் முடிவே இல்லாமல் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அவர் தொகுப்பாளினியாக ஒரு எபிசோடுக்கு மூன்று முதல் நான்கு லட்சம் வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் தற்போது அவருக்கு 5 கோடிக்கு மேல் சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் டிடி சில தொழில்களை செய்து வருவதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய் டிவியில் அவர் சம்பாதித்தது கோடி கணக்கில் என்றாலும் அவர் சம்பாதித்த மனிதர்கள் தான் விலைமதிப்பில்லாதது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட திரையுலகில் உள்ள அனைவரும் டிடிக்கு நெருக்கமானவர்கள் என்பதும் அதில் நயன்தாரா, த்ரிஷா உட்பட ஒரு சிலர் மிக நெருங்கிய தோழிகளாகவும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...