24 660799b4c9dbe
இலங்கைசெய்திகள்

ராஜபக்சர்களால் கைவிடப்பட்ட கருணா! ரணிலிடம் சரணாகதி

Share

ராஜபக்சர்களால் கைவிடப்பட்ட கருணா! ரணிலிடம் சரணாகதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவளிக்கப் போவதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா)(Vinayagamoorthi Muralidaran) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில்(Batticaloa) நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, அம்மான் படையணி என்ற புதிய படையணி ஒன்றை தான் உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் அரசியலில் தீவிரமாக இயங்கிய கருணா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததுடன் செயற்பாட்டு ரீதியாக தீவிர அரசியலில் ஈடுபடவில்லை.

மேலும், ராஜபக்சர்களின்(Rajapaksa Family) தீவிர ஆதரவாளனாகவும் கருணா செயற்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்களால் கைவிடப்பட்ட ஒருவராக அடையாளப்படுத்தப்படுகின்றார்.

இந்தநிலையிலேயே தற்போது இலங்கையில் இரண்டு பிரதான தேர்தல்கள் நடத்தப்படவுள்ள சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு தான் ஆதரவு தெரிவிக்கப்போவதாக கருணா அறிவித்துள்ளமை குறிப்பிடத்கத்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1763526428 PHON 6
செய்திகள்இலங்கை

தொலைத்தொடர்பு வரிச் சுமை: இணைய சேவைக்கு 20.3%, குரல் அழைப்புகளுக்கு 38% வரி – TRC அதிகாரிகள் உறுதி!

இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள், இணைய சேவைக்காக 20.3% வரியையும், சாதாரண குரல் அழைப்புகளுக்காக (Voice...

24 671cb473e1c4c
செய்திகள்இலங்கை

சுற்றுலாத் தலங்களில் இரட்டைப் பாதுகாப்பு: சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸ் கண்காணிப்புத் தீவிரம்

பிரதான சுற்றுலாத் தலங்களை அண்மித்த பகுதிகளில் சீருடை அணிந்த மற்றும் சிவில் உடையில் உள்ள காவல்துறை...

691cc63de4b0849d3c3c4866
செய்திகள்உலகம்

நைஜீரியாவில் பாடசாலை விடுதியில் கொடூரம்: ஆயுதம் ஏந்திய குழுவினால் 25 மாணவிகள் கடத்தல் – பாதுகாவலர் சுட்டுக்கொலை!

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலமான கெப்பி (Kebbi) மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் விடுதியில்...

image c40cb1ef0e
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்க மீதான விசாரணை இறுதிக்கட்டத்தில்: விரைவில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் – சட்ட மாஅதிபர் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்தி வரும் விசாரணை...