24 66063257cf64e
இலங்கைசெய்திகள்

இலங்கையின் சர்வதேச இறையான்மை பத்திரங்களை மறுசீரமைக்க கோரிக்கை

Share

இலங்கையின் சர்வதேச இறையான்மை பத்திரங்களை மறுசீரமைக்க கோரிக்கை

இலங்கை தனது 12 பில்லியன் டொலருக்கான சர்வதேச இறையான்மை பத்திரங்களை மறுசீரமைப்பு செய்வதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

டொலரின் கடுமையான பற்றாக்குறை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ஆழ்ந்த நிதி நெருக்கடியில் தள்ளப்பட்ட நிலையிலேயே கடன் மறுசீரமைப்பை இறுதி செய்வதற்கான புதிய அடையாளமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 2022 மே மாதத்தில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என அறிவித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் இந்த வாரம், சர்வதேச இறையான்மை பத்திரப்பதிவுதாரர்களுடன் முறையான மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இலங்கை தமது சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் மறுசீரமைப்பின் பின்னணியில், தற்போதுள்ள பத்திரங்களை அமெரிக்க டொலர்களில் புதிய பத்திரங்களுக்கு அதே நாணயத்தில் மாற்றுவதற்கான நோக்கில் செயல்பட்டு வருகிறது” என்று நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2024 ஏப்ரல் 10ஆம் திகதிக்குள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என இலங்கையின் நிதியமைச்சகம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...

Untitled 64
செய்திகள்உலகம்

2 ஆண்டு காலப் பிரிவிற்குப் பின் தாயுடன் இணைந்த ‘பிஸ்ஸான்’: காசாவில் நெகிழ்ச்சியூட்டும் குடும்ப மீள் இணைப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் போரின் மிகக் கொடூரமான அத்தியாயங்களில் ஒன்றாக, 2023-இல் அல்-ஷிஃபா மருத்துவமனையிலிருந்து எகிப்திற்கு...