24 6604de1f9eb7f
இலங்கைசெய்திகள்

யாசகம் பெறும் குழந்தைகள் தொடர்பில் தகவல்

Share

யாசகம் பெறும் குழந்தைகள் தொடர்பில் தகவல்

நாடு முழுவதும் யாசகம் செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை 20,000 முதல் 30,000 வரை உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புள்ளி விபரவியல் மற்றும் தரவுக் கற்கைப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள, நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் முகமாக குருநாகல், அநுராதபுரம், அம்பாறை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

2019ஆம் ஆண்டில் குறிப்பிட்ட அரசு சாரா அமைப்பு நடத்திய முந்தைய ஆய்வுகளின் மூலம், நாடு முழுவதும் 15,000 யாசகம் பெறும் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தெருவோர குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது

கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறுவர்களை கொண்டு யாசகம் செய்வது சட்டப்படி குற்றமாகும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சானக உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...