24 6603c45454802
உலகம்செய்திகள்

20 ஆண்டுகளாக கோடீஸ்வரர் என்பதை மகனிடம் மறைத்த தந்தை!

Share

20 ஆண்டுகளாக கோடீஸ்வரர் என்பதை மகனிடம் மறைத்த தந்தை!

தந்தை ஒருவர் தனது மகனிடம் தான் ஒரு கோடீஸ்வரர் என்பதை மறைத்து 20 ஆண்டுகளாக ஏழை என்று நாடகமாடி வந்துள்ளார்.

சீனாவின் ஹூனான் மாகாணத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஜாங் யூடொங் ( Zhang Yudong). இவர் தனது மகன் ஜாங் ஜிலோங்கிடம் (Zhang Zilong) 20 ஆண்டுகளாக தான் ஒரு ஏழை என்று நாடகமாடி வந்துள்ளார்.

சமீபத்தில் மகன் ஜாங் ஜிலோங் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் அந்த பேட்டியில், “எனக்கு 20 வயது ஆகும் வரை நாங்கள் கோடீஸ்வரர் என்பதே எனக்கு தெரியாது.

சாதாரண குடியிருப்பில் தான் வசித்து வந்தோம். சாதாரண பள்ளியில் தான் நான் படித்தேன். எங்களுக்கு ஒரு நிறுவனம் இருக்கிறது என்றும், அந்நிறுவனம் கடனில் இயங்குகிறது என்றும் தந்தை கூறியிருந்தார்.

அதனால் கடனை அடைக்க வேண்டும் என்று நான் கடுமையாக படித்தேன். மேலும், படிக்கும் போதே மாதம் 6 ஆயிரம் யுவான் சம்பளத்திற்கு நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்கு சேர்ந்தேன். அந்த சம்பளத்தை வைத்து கடனை அடையுங்கள் என்று அபபாவிடம் கூறுவேன் .

பின்னர், நான் கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் தங்களது பொருளாதார நிலையை பற்றியும், சொத்து விபரத்தையும் பற்றியும் எனது தந்தை தெரிவித்தார். அவர் அப்படி பொய் கூறியதால் தான் உழைப்பை பற்றி தெரிந்தது” என்று கூறினார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...