24 6603b89ee80e6
உலகம்செய்திகள்

மாஸ்கோ தாக்குதல்…. 4,000 உக்ரைன் கைதிகளின் உயிர் ஊசல்

Share

மாஸ்கோ தாக்குதல்…. 4,000 உக்ரைன் கைதிகளின் உயிர் ஊசல்

மாஸ்கோ மீதான ஐ.எஸ் தாக்குதலை திசை திருப்பி, ரஷ்ய சிறையிலிருக்கும் உக்ரைன் கைதிகள் 4,000 பேர்களுக்கு விளாடிமிர் புடின் மரண தண்டனை விதிக்கலாம் என நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

மாஸ்கோ தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்யா தரப்பில் வாதிட்டு வரும் நிலையிலேயே 4,000 கைதிகளின் உயிர் ஊசலில் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நெருக்கடியான நிலையை பயன்படுத்தி விளாடிமிர் புடின் மீண்டும் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவரலாம் என்றும், உக்ரைன் கைதிகளுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் கவலை எழுந்துள்ளது.

இதனிடையே ரஷ்ய நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், மாஸ்கோ தாக்குதலானது முழுமையான ஐ.எஸ் தாக்குதல் போன்று இல்லை என்றும், இது ரஷ்யாவுக்குள் திட்டமிடப்பட்ட தாக்குதலாகவே தென்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட கொலைவெறித் தாக்குதல் ரஷ்ய ஜனாதிபதியை மோசமான முடிவெடுக்கவும் தூண்டலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, மரண தண்டனையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரும் பொருட்டு, ரஷ்ய அரசாங்கமே இந்த தாக்குதலை ரகசியமாக முன்னெடுத்திருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீண்டும் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவந்தால், உக்ரைன் மொற்றொரு மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 4,000 உக்ரைன் கைதிகள் ரஷ்யாவில் சிறையில் உள்ளனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் பொருட்டும், மாஸ்கோ தாக்குதலை அனுமதித்திருக்கலாம் என நிபுணர் தரப்பில் சந்தேகம் எழுப்பப்படுகிறது.

இதன் பொருட்டே, விளாடிமிர் புடினின் நெருங்கிய வட்டாரத்தில் பலரும் தற்போது மரண தண்டனை தொடர்பில் கருத்து தெரிவித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...