24 66029943e8306
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை

Share

இலங்கை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை

பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருதாக கூறப்படும் இலங்கையில், வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் மீது கணிசமான அளவு வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சுமை குறைந்தப்பட்சம் தற்போது தொடர வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தின் பலதரப்பட்ட பிரிவினரால் இது தொடர்பாக அதிருப்திகள், கவலைகள் வெளியிடப்படுகின்றன.

எனினும் நாடு மீண்டும் வீழ்ச்சியடையாமல் இருக்க, இலங்கை தற்போதைய மட்டத்தில் தொடர்ந்து வரிகளை சுமத்துவது இன்றியமையாதது என்று கடன் வழங்குபவரான சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

“அரசாங்கம் வழங்கும் அத்தியாவசிய சேவைகளுக்கு நிதியளிப்பதற்காக, இலங்கைக்கு முற்றிலும் புதியதல்ல. வரிச்சுமை அவசியமானது என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிறிலங்காவுக்க குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரி வசூலிப்பின் மூலமே அனைவருக்கும் பொதுவான பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்தநிலையில் இந்த பொதுவான பொருட்களை அனைவரும் தொடர்ந்து அனுபவிக்க விரும்பினால், ஒவ்வொருவரும் அளவான பங்களிப்பை வழங்க வேண்டும். அதுவே நெருக்கடியின் மூல காரணங்களில் ஒன்றை நிவர்த்தி செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கணிசமான நெருக்கடியில் இருப்பதையும் உண்மையான வருமானம் கணிசமான அளவில் குறைந்துள்ளதையும் பிரேயர் ஒப்புக்கொண்டார்.

2022 இல் இலங்கை டொலர் மதிப்பின்படி, பொருளாதார நடவடிக்கையில் தமது ஆறில் ஒரு பங்கை இழந்தது, அதே நேரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2022 உடன் ஒப்பிடும்போது 2023 இல் 15 சதவீதம் டொலர் மதிப்பீடு குறைந்துள்ளது.

என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார் எனவே, நிச்சயமாக, இலங்கை மக்கள் அந்த கட்டத்தை ஒவ்வொரு நாளும் உணர்கிறார்கள் என்றும் ப்ரூயர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...