24 65ff7b6abf522
உலகம்செய்திகள்

மொஸ்கோ தாக்குதலின் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு

Share

மொஸ்கோ தாக்குதலின் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு

ரஷ்யா – மொஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி மண்டபம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவசரகால சேவை பணியாளர்கள் கட்டிடத்தின் இடிபாடுகளில் தொடர்ந்தும் தேடுதல்களை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

தாக்குதல்தாரிகளின் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் மண்டபத்துக்கு தீயிட்டபோதே பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் அரங்கிற்குள் நுழைந்து, பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதுடன் அரங்கத்துக்கு தீயிட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் நாட்டின் எல்லைக்கு அருகில் ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைனுக்குள் செல்ல முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தாக்குதல்தாரி ஒருவர் தாக்குதலைச் செய்ய தனக்கு எப்படி பணம் கொடுக்கப்பட்டது என்பதை விவரிக்கும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

”இந்த தாக்குதல்களை நடத்துவதற்காக தமக்கு 500,000 ரூபிள் தருவதாக உறுதியளிக்கப்பட்டது.

இதில் பாதி தொகை தமது வங்கி செலவு அட்டைக்கு மாற்றப்பட்டது.” என அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...