24 65ff78d2611dd
இலங்கைசெய்திகள்

அடுத்த மாதம் முதல் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்

Share

அடுத்த மாதம் முதல் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்

மத்திய வங்கியின் சம்பளத் திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற நிதிக் குழுவினால் முன்வைக்கப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் மத்திய வங்கி ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, மத்திய வங்கியின் சம்பள திருத்தத்தை மீளாய்வு செய்வதற்கு உடனடியாக குழுவொன்று நியமிக்கப்பட்டு சம்பள அதிகரிப்பு ஒத்திவைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பளப் பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்க சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கைக்கு 4 வார கால அவகாசம் வழங்குவதற்கு தாம் இணங்கியுள்ளதாகவும், மத்திய வங்கியில் திருத்தம் செய்யாமல் இது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் கூறியுள்ளார்.

அதன்படி, அடுத்த மாதம் முதல் தீர்வு கிடைக்கும் வரை பழைய ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பொறுப்புக்கூறலின் கீழ் நாடாளுமன்ற நிதிக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள மத்திய வங்கி இணங்கியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...