24 65ff9c3b1b3c7
இலங்கைசெய்திகள்

கடும் போட்டியில் அரசியல் கட்சிகள் : 1000 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தகவல்

Share

கடும் போட்டியில் அரசியல் கட்சிகள் : 1000 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தகவல்

பொதுமக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்காக பல்வேறு வகையான கணக்கெடுப்புகளை மேற்கொள்வதற்காக மூன்று பிரதான அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

அதற்காக ஆயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை கணக்கெடுப்பு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில கணக்கெடுப்பு நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது ஆய்வு அறிக்கைகளை அந்தந்த அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட காலமாக கணக்கெடுப்பு நடத்தும் நிறுவனங்கள் இருப்பதாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள்.

கணக்கெடுப்பு பணிக்காக அந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நாட்களில் மூன்று கணக்கெடுப்பு நிறுவனங்கள் கணக்கெடுப்பு நடத்தி வருவதாக தெரிய வருகிறது.

பொதுமக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை திட்டமிடுவதே இந்த ஆய்வுகளின் நோக்கம் என அரசியல் கட்சி பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் மேடைகளில் சாதகமான கணக்கெடுப்பு அறிக்கைகளை முன்வைத்து அரசியல் ஆதாயம் பெறுவதும் இதன் மற்றொரு நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....