24 65fe47ece69fe
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களில் ஊழல் மோசடி

Share

அரச நிறுவனங்களில் ஊழல் மோசடி

அரச நிறுவனங்களில் பாரிய ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமை காரணமாக அதிகாரிகள் தொடர்ந்தும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.

நாட்டின் பல அரச நிறுவனங்களில் பாரிய ஊழல், மோசடி, முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், கணக்காய்வுச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கு எதிரான அரச நிர்வாக அதிகாரிகளினால் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தொடர்ச்சியாக பதவிகளில் நீடித்துள்ளமையினால் சுகாதார அமைப்பின் நம்பகத்தன்மை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...