24 65fd14ec2a37b
இலங்கைசெய்திகள்

தேர்தலில் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்

Share

தேர்தலில் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்து தேர்தலில் வெற்றிபெறச் செய்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை கூறுவதற்காகவே நான் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளேன் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “உங்கள் நம்பிக்கையின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அத்திபாரத்தை அமைப்பதே எமக்கு அவசியமாகும்.

தங்களது பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்துவதே யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் ஒரே நோக்கமாகும். மேலும், இந்த பிரதேசத்தின் விவசாயத் துறையை நாம் எவ்வாறு முன்னேற்றுவது? பெரும்பாலோனரின் உறவினர்கள் இங்கு வெளிநாடுகளில் உள்ளனர்.

சுமார் 40 முதல் 45 சதவீதமானனோரின் குடும்பங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகின்றது. இதன் காரணமாக அந்த பணமானது புகைத்தல் அல்லது மதுபானம் போன்ற அவசியமற்ற செயற்பாடுகளுக்காக செலவிடப்படுகின்றது.

எனவே, அந்த பணத்தை எவ்வாறு சரியான முறையில் செலவு செய்வது என்பது பெற்றோருக்கு உள்ள பிரச்சனையாகும்.அத்துடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதும் ஒரு பிரச்சினையாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் சேதமடைந்துள்ள சின்னங்களை சீரமைப்பது மற்றும் கோவில்களை புனர்நிர்மாணம் செய்தல் முதலான பிரச்சனைகளுக்கு எவ்வாறு பதில் தேடுவது என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாகும்.

நீங்கள் இவற்றை எமக்கு மறைக்க வேண்டிய தேவையில்லை. உண்மையான தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்பதற்காகவே நாம் உங்களுடன் வருகின்றோம்.

நாட்டில் தற்போது அர்ப்பணிப்புடன் செயல்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதே இதற்கு ஒரே தீர்வாகும்.

எதிர்காலத்தில் மாதத்திற்கு ஒரு முறை இங்கு வந்து, உங்களிடம் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நிறுத்தி ஜனாதிபதியாக தேர்வு செய்வதற்காக நாம் இபபொழுதிருந்தே செயற்பட வேண்டுமென்பதை நான் இங்கு கூறுகின்றேன்”என்றும் கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...