24 65fccf67c23eb
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்

Share

பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்

பாதாள உலகக்குழு உறுப்பினர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடு அனுப்பிவைப்பதற்காக பாரியளவு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வெளிநாடு தப்பிச்செல்வதற்காக மோசடியான முறையில் கடவுச்சீட்டுக்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதற்காக கடவுச்சீட்டு ஒன்றுக்கு ஐந்து இலட்சம் ரூபா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் சில மோசடியான அதிகாரிகள் இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டு போலிக் கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர்கள் இருவர் உள்ளிட்ட சிலர் நீண்ட காலமாக இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹினடியான மகேஸ், மதுகம ஷான் உள்ளிட்ட பாதாள உலகக்குழு தலைவர்கள் மற்றும் ஐந்து உறுப்பினர்களுக்கு போலியான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

போலி கடவுச்சீட்டு வழங்கிய குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலகக்குழு உறுப்பினர்களை போலி கடவுச்சீட்டுக்கள் மூலம் டுபாய்க்கு அனுப்பி வைப்பதற்காக இவ்வாறு ஒரு கடவுச்சீட்டுக்கு ஐந்து இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...