24 65fbbf4d1a915
இலங்கைசெய்திகள்

அமெரிக்கா சென்று மீண்டும் நாடு திரும்பிய அமைச்சர்

Share

அமெரிக்கா சென்று மீண்டும் நாடு திரும்பிய அமைச்சர்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை இடைநிறுத்திக் கொண்டு நேற்று இலங்கை திரும்பியுள்ளார்.

அவர் வாஷிங்டன் டிசிக்கு சென்று இறங்கியவுடன், வாக்களிப்பில் கலந்துகொள்வதற்காக நாடு திரும்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்மைக் கோரியுள்ளதாக அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதுவர் தனக்குத் தெரிவித்ததாக அமைச்சர் குணவர்தன நாடு திரும்பியபோது தெரிவித்துள்ளார்.

உலக வங்கி ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கில் கலந்து கொள்வதற்காகவே அவர் அமெரிக்கா சென்றிருந்தார்.

இந்நிலையில் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து நாட்டுக்கு பல வழிகளில் சேவையாற்றிய சபாநாயகருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் குணவர்தன செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று மாலை இடம்பெறவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...