14 5 scaled
இலங்கைசெய்திகள்

ஆற்று நீரில் உப்பு கலக்கும் அபாயம்

Share

ஆற்று நீரில் உப்பு கலக்கும் அபாயம்

ஆற்று நீரில் உப்பு கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நிலவும் வெப்பமான காலநிலையினால் மாத்தறை நில்வளா ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வருவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நில்வளா ஆற்றில் கட்டப்பட்டிருந்த உப்புத் தடுப்புகள் விவசாய அமைப்புகளின் எதிர்ப்பினால் ஓரளவு அகற்றப்பட்டதையடுத்து இந்நிலை தோன்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நில்வளா ஆற்றில் கலக்கும் உப்புகள் அதிகரித்தால், சுத்திகரிப்புக்காக பெறப்படும் தண்ணீரில் உப்பு கலக்கும் வாய்ப்பு உள்ளதாக நீர்வள வாரிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வறண்ட காலநிலை தொடரும் பட்சத்தில், அதனால் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக நீரியல்வள சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...