tamilnif 23 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது

Share

கோட்டாபயவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உடற்பயிற்சி ஆலோசகர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கோட்டாபயவின் உடற்பயிற்சி ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றி வந்த முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியில் வைத்து குறித்த முன்னாள் இராணுவ உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸார் வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபரின் வீட்டிலிருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் சந்தேகநபரை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கோட்டாபய பதவி விலகியதுடன் குறித்த நபரும் இராணுவத்திலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
இராணுவம் உட்பட 5 பேர் யாழில் கைது 1
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் அதிரடிச் சோதனை: ஒரே நாளில் 578 பேர் கைது – போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4,000 பேருக்கு எதிராக வழக்கு!

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்...

IMG 20241002 132353 800 x 533 pixel
செய்திகள்இலங்கை

ராஜகிரிய விபத்து வழக்கு: பாட்டலி சம்பிக்க உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணை பிப்ரவரி 12-க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ராஜகிரிய விபத்து...

MediaFile 8 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகுதியற்ற பேருந்தைச் செலுத்தி விபத்து: இ.போ.ச சாரதிக்கு ஒரு வருடம் கடூழியச் சிறை!

ஓடுவதற்குத் தகுதியற்ற பேருந்தைச் செலுத்தி நபர் ஒருவரின் மரணத்திற்குப் பொறுப்பானவர் எனக் கண்டறியப்பட்ட இலங்கை போக்குவரத்துச்...

23 6496dd9c83a26
செய்திகள்இலங்கை

பணவீக்க இலக்கை எட்டத் தவறிய மத்திய வங்கி: நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானம்!

பணவீக்க இலக்குகளை எட்டத் தவறியமை குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இலங்கை...