tamilni 384 scaled
சினிமாசெய்திகள்

சும்மா அதிருதுல்ல.. தானாக முன்வந்து அரசு கொடுத்த பாதுகாப்பு.. விஜய்யின் கேரள எண்ட்ரியால் பரபரப்பு..!

Share

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதை அடுத்து விஜய் உட்பட படக்குழுவினர் திருவனந்தபுரம் செல்ல உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே ’கோட்’ படக்குழுவினர் திருவனந்தபுரம் சென்று விட்டதை அடுத்து இன்று விஜய் திருவனந்தபுரம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் விஜய் திருவனந்தபுரம் வருகிறார் என்ற தகவல் அறிந்து கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடி இருப்பதாகவும் ஏராளமான கூட்டம் அங்கு கூடியதை அடுத்து கேரள அரசு தானாகவே முன்வந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேரளாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப், இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த போது அவரை வரவேற்க யாருமே இல்லை என்றும் ஆனால் தளபதி விஜய்யை வரவேற்க ஏராளமான கூட்டம் கூடி இருப்பதால் விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நடைபெறும் கிரிக்கெட் மைதானத்திலும் தளபதி விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் கூடி இருப்பதாகவும் படப்பிடிப்பை பார்ப்பதற்காக வந்த கூட்டத்தை பார்த்து சும்மா அதிருதுல்ல என்ற வசனம் தான் ஞாபகம் வருவதாக கேரள விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஏற்கனவே விஜய் படங்களின் படப்பிடிப்பு நடந்தபோது விஜய் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருந்த நிலையில் தற்போது கேரளாவிலும் அவருக்கு கூட்டம் கூடி இருப்பதை பார்க்கும் போது விஜய் ஒரு தென்னிந்திய நடிகர் என்பதை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்பதால் ரசிகர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...