tamilnaadi 130 scaled
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் தகவல்

Share

வாகன இறக்குமதி தொடர்பில் தகவல்

இந்த ஆண்டு வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாகன இறக்குமதி தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது. ஆனால் இந்த ஆண்டு வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

ஏனென்றால் அதற்காக பல பில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது. 5%-10% தேவையை பூர்த்தி செய்ய சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இருப்பினும், சுற்றுலாத் துறையில் தேவை இருந்தால் அதை கருத்திற்கொண்டு செயற்படுவது தவறில்லை.

தற்போது வயிற்றைப் பற்றி நினைக்காமல் நாட்டைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து கடைசியில் வயிறு, நாடு இரண்டையும் இழந்தபோது, ​​சவாலை ஏற்க யாரும் முன்வரவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவாலை ஏற்றுக்கொண்டார்.

இப்போது நாடு நிதி ஒழுக்கத்துடன் சரியான பாதையில் செல்கின்றது. மக்களுக்கு சிரமங்கள் உள்ளன. இல்லை என்று அர்த்தம் இல்லை. ஆனால் பற்றாக்குறை நீக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியை ஒரேயடியாக தீர்க்க முடியாது. ஆனால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

“அண்ணே, கடனை அடைக்க எனக்கு வழியில்லை. பிற்காலத்தில் தருகின்றேன் என்று சொல்லி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

எமது காலத்தில் 20 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அவை வருமானத்தை அதிகரிக்கும் முறையுடன் செய்யப்பட்டுள்ளன.

எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின பேரணியை மாபெரும் வெற்றியடையச் செய்வதற்கு கட்சியின் அமைப்பாளர்கள் அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாகவும், வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், அதன் மூலம் மக்கள் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வெற்றியை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளதாகவும் எனவே சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை நிச்சயம் கிடைக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...