tamilni 319 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியை எதிர்க்கின்றோம் : பசில்

Share

தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியை எதிர்க்கின்றோம் : பசில்

நாட்டின் முக்கியமான தேசியத் தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் எந்தவொரு முயற்சியையும் தாம் எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் சீரமைப்பு குறித்து ராஜபக்ச அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருந்தாலும், அரசாங்கம் உண்மையிலேயே அந்த கட்சியின் கீழ் செயற்படுகிறதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூர் ஊடகம் ஒன்றுடன் கலந்துரையாடலை நடத்திய அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட சில அமைச்சரவை அமைச்சர்கள் மட்டுமே தமது கட்சி அலுவலகத்திற்கு வருகை தருவதாகக் குறிப்பிட்டார்.

இந்த அமைச்சர்களில் முதன்மையாக இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் கம்பஹா மாவட்டத் தலைவர்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது மக்களின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்காது என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரு வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், அவரது கட்சியே நாடாளுமன்ற தேர்தலின் மூலமும் ஆட்சியைப் பிடிக்கும்.

எனவே அதற்குப் பதிலாக, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக சுயாதீனமாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் ஜனாதிபதி பதவியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...