tamilni 276 scaled
இலங்கைசெய்திகள்

தெற்கில் தொடர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

Share

தெற்கில் தொடர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

தென் மாகாணத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஆகியோருக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

காலி மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நேற்று (13.03.2024) சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, காலி மற்றும் எல்பிட்டிய பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் வைத்து இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், குற்ற அறிக்கைப் பிரிவு, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு, சமூகப் பொலிஸ் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படை, புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் அழைத்து இக்குற்றங்களைத் தீர்ப்பதில் அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும், எவ்வாறு தகவல்களைப் பரிமாறிக் கொள்வது என்பன தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விரைவில் வெளிக்கொணர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...