21 3 scaled
இலங்கைசெய்திகள்

காலாவதியான மருந்து பொருட்களை பயன்படுத்த திட்டம்

Share

காலாவதியான மருந்து பொருட்களை பயன்படுத்த திட்டம்

காலாவதியான மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜீ.விஜேசூரிய இது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”கலாவதியான மருந்துப் பொருட்களை வைத்தியசாலையில் பயன்படுத்துமாறு சுற்று நிருபங்கள் வெளியிடப்படவில்லை.

சில தரப்பினர் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களினால் இலவச மருத்துவ சேவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

இதன்படி மக்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் சேவையை பெற்றுக் கொள்ள தயங்குவார்கள்.

மேலும், கலாவதியான மருந்துப் பொருட்களை பயன்படுத்துமாறு சுகாதார அமைச்சு வைத்தியசாலைகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிவுறுத்தல் வழங்கியதில்லை

காலாவதியாகி மருந்துப் பொருட்கள் விரயமாவதனை தடுக்கும் நோக்கில் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், கலாவதியான மருந்து வகைகளை பயன்படுத்துமாறு கூறப்படவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நிலந்த பிரேமரத்ன
இலங்கை

நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமனம்.

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் இந்த நியமனத்துடன்...

death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...