tamilni h 1 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்காவிற்கு மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ள சர்வதேச விமான நிறுவனம்

Share

கட்டுநாயக்காவிற்கு மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ள சர்வதேச விமான நிறுவனம்

தாய்லாந்தின் விமான சேவை நிறுவனமான தாய் எயர்வேஸ் நிறுவனமானது, இலங்கைக்கான திட்டமிடப்பட்ட விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி அறிக்கை ஒன்றை வெளியிட்ட பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தாய் எயர்வேஸ் விமான பயணத்தின் இறுதி இலக்காக பாங்கொங் விளங்கும் நிலையில், இதில் 28 நாடுகளில் உள்ள 60 நகரங்களுக்கு மேல் செல்ல முடியும் எனவும் கூறப்படுகிறது.

தாய் எயர்வேஸ் நிறுவனமானது ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஆசியா மற்றும் தாய்லாந்தில் உள்ள முக்கிய இடங்களுக்கிடையே செயற்படுவதாக கூறப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் முறையே 207,182 மற்றும் 218,350 சுற்றுலாப்பயணிகளை (விமானம் மூலம்) வரவேற்கும் வகையில் இந்த திட்டம் அமையும் என்றும் நம்பப்படுகிறது.

விமானநிலைய மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் விமான நிறுவனத்தை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய நுழைவாயிலுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் இதன்போது கூறியிருந்தது.

மேலும் இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்திற்குள் 36 விமான சேவைகளை வழங்கியுள்ளதாகவும் விமானப் போக்குவரத்து துறையில் அதன் முக்கிய பங்கை உறுதிப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்ட சர்வதேச நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...