tamilni h 1 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்காவிற்கு மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ள சர்வதேச விமான நிறுவனம்

Share

கட்டுநாயக்காவிற்கு மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ள சர்வதேச விமான நிறுவனம்

தாய்லாந்தின் விமான சேவை நிறுவனமான தாய் எயர்வேஸ் நிறுவனமானது, இலங்கைக்கான திட்டமிடப்பட்ட விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி அறிக்கை ஒன்றை வெளியிட்ட பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தாய் எயர்வேஸ் விமான பயணத்தின் இறுதி இலக்காக பாங்கொங் விளங்கும் நிலையில், இதில் 28 நாடுகளில் உள்ள 60 நகரங்களுக்கு மேல் செல்ல முடியும் எனவும் கூறப்படுகிறது.

தாய் எயர்வேஸ் நிறுவனமானது ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஆசியா மற்றும் தாய்லாந்தில் உள்ள முக்கிய இடங்களுக்கிடையே செயற்படுவதாக கூறப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் முறையே 207,182 மற்றும் 218,350 சுற்றுலாப்பயணிகளை (விமானம் மூலம்) வரவேற்கும் வகையில் இந்த திட்டம் அமையும் என்றும் நம்பப்படுகிறது.

விமானநிலைய மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் விமான நிறுவனத்தை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய நுழைவாயிலுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் இதன்போது கூறியிருந்தது.

மேலும் இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்திற்குள் 36 விமான சேவைகளை வழங்கியுள்ளதாகவும் விமானப் போக்குவரத்து துறையில் அதன் முக்கிய பங்கை உறுதிப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்ட சர்வதேச நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...