tamilni 258 scaled
இலங்கைசெய்திகள்

இந்திய – இலங்கை படகு சேவையை ஆரம்பிக்க திட்டம்

Share

இந்திய – இலங்கை படகு சேவையை ஆரம்பிக்க திட்டம்

இந்த மாத இறுதிக்குள் இரண்டு நாடுகளுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

“இந்த திட்டம் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே இணைப்பை மேம்படுத்துவதையும், நெருக்கமான உறவுகளை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரண்டு அரசாங்கங்களும் கப்பல் திட்டத்தை விரைவாக செயல்படுத்த தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.

எனினும் விதிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்கள் தொடர்பாக ஏற்கனவே உள்ள சிக்கல் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே மானியங்களை வழங்குவது அவசியம்.

பயணங்களின் பொருளாதார சாத்தியத்தை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான ரூபாய்கள் செலுத்தவேண்டியுள்ளது.

இந்தநிலையில் இரண்டு நாடுகளும் படகு இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தபோதும், இன்னும் அவை வெற்றிபெறவில்லை. எனினும் இதற்கான வழியை கண்டுபிடிக்க முடியும் என நம்புகிறேன்.

அதே நேரத்தில் மிகவும் பாரம்பரியமான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் வழியிலான கப்பல் சேவை தொடர்பில் ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின்போது இரண்டு முனைகளிலும் துறைமுக வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்தியாவின் டிஜிட்டல் முன்னேற்றம் பற்றி கருத்துரைத்துள்ள அவர், “இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் மட்டுமே தீவிர வறுமை பிரிவில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...